Sunday, August 21, 2011

பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது?

பிரபஞ்சம் (universe)




பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது?
முத்துக்களை தூவிவிட்டது போல வானத்தில் தோற்றமளிக்கும் நட்சத்திரங்கள் உண்மையில் ஒரு பொய் தோற்றம் தான். இந்த பிரபஞ்சத்தில் விண்மீன்கள் திட்டு, திட்டாக குவியலாக உள்ளது (இதை கடந்த பதுவுகளிலையே பார்த்துவிட்டோம்).
இந்த பிரபஞ்சம் 14.3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு பெரு வெடிப்பு (big bang theory) மூலம் உருவானது என்கிறது அறிவியல். (அதிலும் பெரு வெடிப்பு கொள்கையே தவறு என்று கூறும் அறிவியலார்களும் உண்டு ) ஆனால் அந்த பெரு வெடிப்பு கொள்கை நிகழ்வதற்கு ஒரு நொடிக்கு முன்பு எப்படி இருந்தது என்பதற்கு அன்மீகதிலோ அல்லது கடவுளிடமோ தான் கேட்க வேண்டும்.


நாலா பக்கமும் புகை மூடம் போல விரிந்த பிரபஞ்சம் நாளாக ஆக திட்டு திட்டாக ஆங்காங்கே புகை மூட்டங்கலாக திரண்டு உடுமண்டலங்கள்(galaxy) உருவாகியது. இந்த உடுமண்டலங்கள் நாளடைவில் நட்சதிரன்களாக பிரிந்து இன்று இருக்கும் நிலையை எட்டி உள்ளது

இனி ஒளி ,ஒலி மற்றும் உயிரினங்கள் எவ்வாறு தோன்றியது என்பதை பாப்போம்
ஓலி, ஒளி, பொருள், ஈர்ப்பு விசை எவ்வாறு பிறந்தது ?
ஒளி (light):
மாபெரும் வெடிப்புடன் ஒரு நாள் உதித்தது இந்த பிரபஞ்சம் (14 .3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு )நெருப்புகுலம்புடன் ஒளிரும் ஒரு மாபெரும் கோளமாக அது விரிந்து கொண்டே இருந்தது
அக்கோலதினுள் அணுவின் மூலக்கூறுகளாகிய electron, proton மற்றும் neutron மற்றும் பிற அடிப்படை துகள்கள் யாவும் மிக பிரகாசமான ஒளி வெள்ளத்துடன் நிறைந்து கிடந்தன
பொருளில் அவை ஒன்றாக தெரிந்தாலும் பொருள் என்றும் ஒளி (light) என்றும் வேறுபடுத்த கூடியவையாக அவை இருந்தன பொருள்களுக்குள்ளே சிறை பட்டு கிடந்த ஒளியின் போட்டோன்கள் அணு துகள்களுடன் மோதி எதிரொலித்து உள்ளே சுற்றியபடி கிடந்தன



அது தான் அணைத்துக்குமான மூல பிரபஞ்சம் அல்லது குழந்தை பிரபஞ்சம் ஆகும். இந்நிகழ்வு நடக்க அது 3800 ஆண்டுகள் எடுத்து கொண்டது. பின்பு அது பான் மடங்காக விரிவடைந்ததால் பிரபஞ்சம் குளிர்வடைந்தது electron, proton மற்றும் neutron மற்றும் பிற துகள்கள் ஒன்று கூடி (atom) அணு உருவாகியது
இதனால் வெற்றிடம் மிகுந்தது இதனால் இய்ம்பூதங்களில் ஒன்றான ஆகாயம் உருவாகியது

ஒளி சுதந்திரமாக பரவ ஆரம்பித்தது
ஒரு வழியாக ஒளி வேறு அணு வேராக பிரிந்தது அன்று தோன்றிய ஒளி விரிவடைந்திருக்கும் பிரபஞ்சதினுள் பரவியபடியே இருந்தது இருக்கிறது அதே ஒளி இன்றும் நம்மை நோக்கி வந்த படி உள்ளது
அந்த ஆதி ஒளியை 14 பில்லியன் ஆண்டுகளுக்கு பிறகும நம்மால் கருவிகள் மூலம் இன்றும் காண முடிகிறது அவ்வொளியை (cosmic micro wave band - cmb) என்று அழைக்கிறார்கள்



டிவி இல் இரண்டு சேனல்களுக்கு இடையே ஏற்படும் இரைச்சலில் 1 சதவீதம் இந்த நுன்னலயாலே ஏற்படுகிறது தொலைநோக்கியின் மூலம் இதை ஆராயும் போது எல்லா திசைகளிலிருந்தும் ஒரே சீராக
ஒரே மாதிரியாக பரவி இருப்பது தெரியவரிகிறது
1965 லையே ரேடியோ ஆண்டேனக்களில் ஒரு வித இரைச்சலை இவ்வலைகள் ஏற்படுத்துவதை கண்டறிந்துள்ளனர்
cosmic baground explorer என்டர் விண்கலம் 1990 இல் இந்த ஆரைய்சிக்க்காகவே அனுப்பப்பட்டது எதிர்பார்த்த படி cmb அகிலம் முழுதும் சீராக இருப்பதை நிரூபித்தது
பிரபஞ்சத்திற்கு முழுமுதற் காரணமாக விளங்கும் ஆதி பிரபஞ்சதினுள் இருந்து நாதம் (sound) பிறந்தது
அணுவும் ஒளியும் இணைந்து பொருட்கள் உருவாகும் போது ஓலி (sound) உருவானது எப்படி
ஓலி பரவும் போது அடுத்தடுத்து காற்றை நசுக்கியும் தளர்த்தியும் (அலையை உருவாக ) பரவுவதை போல
பிளச்மாவும் நசுக்கப்பட்டு தளர்தபட்டும் சலனப்பட்டது நசுங்கிய இடங்களில் பிளாஸ்மா மேலும் சூடடைந்தது
தளர்த்தப்பட்ட இடங்களில் மேலும் குளிர்வடைன்தது இதன் காரணமாக தான் ஆரம்ப குழந்தை பிரபஞ்சத்தில் திட்டு திட்டக வெப்ப மாற்றங்கள் ஏற்பட்டன. பிரபஞ்சம் விரிவடைகையில் இதுவும் விரிவடைந்தது

இது இப்படி இருக்க ஆரம்ப பிரபஞ்சத்தில் ஒளியின் தாகுதளிளிருந்து விடுபட்ட அணுக்கள் எங்கெல்லாம் ஒலியால் பெருக்கப்பட்டு அடர்வாகினவோ அங்கெல்லாம் அவை ஒன்று கூடி திரண்டன திரட்சி ஏற்பட்டதால் ஈர்ப்புவிசை ஏற்பட்டது இந்த நிறை ஈர்ப்பு விசையினால் பல பொருட்கள் ஒன்று திரண்டன



அதே போல் ஒலியால் தளர்வு அடைந்த பொருட்கள் ஈர்ப்புதிகமான பொருளை நோக்கி சென்றன இப்படியாகவே உடுமண்டலங்களும் கோள்களும் உருவாகின
நாதம் முதலில் தோன்றியது பின்பு வித்(ந்ட் )துக்கள் தோன்றியது.
எங்கோ கேட்டது போல இருக்கிறதா இதை தான் அருணா கிரி நாதர் நாத விந்துகலாதி நோ நாம என்று பாடியிருக்க்ரர்
நாதத்திலிருந்து விந்து பிறந்ததாக சைவ சித்தாந்தம் கூறுகிறது ஒளியே பிரணவம் என்றும் அதுவே அனைத்திற்கும் மூல காரணம் என்றும் சித்தாந்தம் கூறுகிறது
இது போல அணைத்து சமயங்களிலும் எதோ ஒரு வழியில் இதை சொல்லி இருப்பார்கள்
அனால் இதை ஆதி மனிதர்கள் எவ்வாறு அறிந்தார்கள் என்பது ஆச்சர்ய மகா உள்ளது
எந்த கருவியும் இன்றி மெய்யே கருவியாக கொண்டு கண்டுபிடித்திருக்க வேண்டும்
பிரபஞ்சம் ஆரம்பம் முதல் தற்போது வரை




Wednesday, August 17, 2011

பிரபஞ்சம்-1 (universe-galaxies)



அண்டங்கள் (galaxies)




வானத்தில் பரவிக்கிடக்கும் நட்சத்திரங்களின் தொகுப்பே உடுமண்டலங்கள் அல்லது அண்டங்கள் அல்லது galaxy ஆகும்.நட்சத்திரங்கள் என்றால் ஒன்றல்ல, இரண்டல்ல, ஆயிரமல்ல, லட்சக்கணக்கான நட்சத்திரங்களின் தொகுப்பே galaxy ஆகும்
நமது galaxy ஆகாய கங்கை அல்லது பால் வெளி வீதி (milky way galaxy) என்றலைக்கப்படுகிறது.

இவற்றின் பரப்பு சில ஆயிரங்களிலிருந்து சில லட்சம் ஒளி ஆண்டுகள் வரை இருக்கலாம் . இவற்றின் நிறை பல மில்லியன் / ட்ரில்லியன் சூரியக்குடும்பங்களின் நிறை அளவுக்கு இருக்கும் ஒரு உடுமண்டலதுக்கும் மற்றொரு உடுமண்டலதுக்கும் இடையே பல மில்லியன் ஒளி ஆண்டுகள் தூரம் இருக்கும்

நாம் இருப்பது ஒரு மாபெரும் சுருள் மண்டலத்தில் (spiral galaxy). இதன் விட்டம் ஒரு லட்சம் ஒளி ஆண்டுகள் இருக்ககூடும். அனால் நம்மருகே இருக்கும் ஆண்டிறோமேடா உடுமண்டலம் 2 .3 ஒளிஆண்டுகள் விட்டம் கொண்டது



உடுமண்டலங்கள் தான் அமைப்பை பொருத்து 4 வகையாக பிரிக்கப்படுகிறது

1 .சுருள் வடிவ உடுமண்டலம்: (spiral galaxies)



2 . லேண்டிகளர் உடுமண்டலம்: (lenticular galaxies)
இதுவும் ஒரு வகையான சுருள் வடிவ உடுமண்டலம் தான் ஆனால் சுருளை உருவாக்கும் நடுப்பகுதி வேகமிழந்து
எரிபொருள் தீர்ந்து விட்டதால் இப்படி அழைக்கின்றனர் இவை காலத்தால் பழையவை மேலும் இவற்றின் அருகில் ஈர்ப்பு சக்தி அதிக முடைய வேறொரு உடுமண்டலம் இல்லாதிருக்க கூடும்
(இது அண்டங்களுக்கு மட்டுமல்ல நமக்கும் பொருந்தும்)



3 . நீள்வடிவ உடுமண்டலம் : (eleptical galaxies )
இவ்வுடுமண்டலங்கள் தன்னை தானே சுற்றி கொள்ளாததால் இவ்வாறு அழைக்கப்படுகின்றன, இருந்த போதிலும் இவற்றில் உள்ள கோள்கள் நட்சத்திரங்கள் சுற்றி கொண்டுதான் இருக்கும் மொத உடுமண்டலமும் சுற்றுவதில்லை


4 . வடிவமற்ற உடுமண்டலங்கள் (irregular galaxies)
இவை ஒழுங்கான உருவமில்லாதவை விநோதமானவை ஆயரக்கனக்கான வினோத வடிவம் கொண்ட உடுமண்டலங்கள் இருக்கின்றன



நீங்கள் பார்க்கும் இந்த உடுமண்டலம் இணைந்து இன்னும் சில பில்லியன் ஆண்டுகளில் ஒரே உடுமண்டலமாக மாறிவிடும்
நீங்கள் பார்க்கும் இந்த 2 உடுமண்டலங்களும் உள்ள சண்டையை கண்டுகளியுங்கள். இதில் ஒருவர் இன்னொருவரை இல்லுக்க முயற்சிக்குரர் 200௦௦ மில்லியன் ஆண்டுகளுக்கு ஒரு முறை யாரோ வெற்றி பெருகிரர்கலாம்
இத்தனை உடுமண்டலங்களை பார்த்து விட்டு நம் பால் வெளி அண்டத்தை பார்க்காமல் போனால் எப்படி இது நம் சூரிய குடும்பம் இருக்கும் பால் வெளி அண்டம்



நமது சூரியன் இருக்கும் இடத்தை குறித்திருக்கிறார்கள் கவலைப்படதிர்கள் நீங்களும் நானும் இந்த புள்ளியில் புள்ளியில் புள்ளியல் புள்ளியில் புள்ளியாய் ................. இருக்கொறோம் .
இனி பால் வெளி அண்டத்தின் இயல்புகளை பாப்போம் :
விட்டம்: 90000 ஒளி ஆண்டுகள்
நட்சத்திரங்களின் எண்ணிக்கை : 200 பில்லியன் ( இருக்கும், இருக்கலாம் நான் எண்ணி பார்கவில்லை )
மொத நிறை : ௧ டிரில்லியன் சூரிய நிறை



நமது சூரியனுக்கும் மையத்துக்கும் உள்ள தூரம் : 26000 ௦ ஒளிஆண்டுகள்
சூரியன் உடுமண்டலத்தை சுற்றி வரும் வேகம் : ரொம்ப இல்ல 220 கிலோமீட்டர் / விநாடி
சூரியனின் ஒரு ஆண்டு : 225 மில்லியன் ஆண்டுகள் (அதாவது ஒரு முறை உடுமண்டலத்தை சுற்ற எடுத்து கொள்ளும் கால அளவு )




(1 ஒளியாண்டு என்பது ஒளியின் திசை வேகத்தில் ஒரு பொருள் 1 வருடத்திற்கு பயணம் செய்யும் தூரம் ஆகும்)

(புதிதாக படிப்பவர்கள் தயவு செய்து முந்தைய பதிவுகளை படித்துவிட்டு படிக்கவும் அப்பொழுது முழுமையான தெளிவு பெற முடியும்)

(நன்றி நண்பர்களே அடுத்த பதிவு பிரபஞ்சம் universe இந்த பிரபஞ்சம் , உயிர்கள், பொருட்கள் எல்லாம் எவ்வாறு தோன்றின என்பதை பார்க்கலாம் முக்கியமான பதிவு aug 20 இரவு பதிவு இடப்படும்)

Wednesday, August 10, 2011

நட்சத்திரங்களின் கதை


நட்சத்திரங்கள்(stars):



இன்றைய தினம் நம் பிரபஞ்சத்தில்(universe) ஓட்டெடுப்பு நடத்தினால் பெரும்பான்மையாக நட்சத்திரங்கள் தான் இருக்கும்.
நம் பூமி போன்ற கிரகங்கள்(planet) எல்லாம் சிறுபான்மையினர் தான்

நட்சத்திரங்கள்(stars) எவ்வாறு பிறக்கின்றன ?



இந்த பிரபஞ்சத்தில்(universe) வெறும் வெற்றிடம் மட்டும் இல்லை வாயுக்களாலும், தூசுக்களாலும் நிரப்பப்பட்டுள்ளது


இந்த வாயுக்களும், தூசுக்களும் சேர்ந்து மேக மூட்டமாய் இருக்கும் இடத்தை நெபுளாக்கள்(nebula) என்று அழைக்கின்றனர் .



ஹைட்ரோஜன்(hydrogen), ஹீலேயம்(heleyum), தாதுக்கள்(அணுக்கள் & மூலக்கூறுகள்) கொண்ட மேகத்தில் ஒன்றுக்கொன்று சிறு ஈர்ப்பு விசையும், விலகலும் ஏற்படுகிறது. இந்த விசைகளினால் தாதுக்கள் சுழல ஆரம்பிக்கின்றன.
இதனால் அணுக்கள் நெருங்குகின்றன. இவை சுற்ற சுற்ற வெப்பமும் அதிகரிக்கிறது. இதனால் வாயுக்கள்(நிறை குறைந்தவை) உள்ளும், தாதுக்கள்(நிறை அதிகம் கொண்டவை) வெளியிலும் கொண்டு வேகமாக சுழல்கிறது

இதில் உள்ளே சுற்றும் வாயுக்கள் நட்சத்திரங்களகவும், வெளியே சுற்றும் தாதுக்கள் கோள்களாகவும், , பெரும் பாறைகளாகவும், நிலக்களாகவும் உருமாறுகின்றன, இந்த சமயத்தில் அந்த நட்சத்திர மண்டலத்தின் வயது 10 ,00 ,000 ஆண்டுகள் ஆகும்.

ஆம் , இந்நிகழ்வு நடப்பதற்கு 10,000௦ ஆண்டுகளிலிருந்து 10,00,000 ஆண்டுகள் வரை ஆகும்

நமக்கு எப்படி இரவும் பகலும் இருக்கிறதோ அதே போல நட்சத்திரங்கலை வாழ வைப்பது இரு சக்திகள், அவை ஈர்ப்பு சக்தியும், அழுத்தமும் தான்.
ஒரு நட்சத்திரம் உயிர் வாழ வேண்டுமாயின் அது சுழல்வதற்கு தேவையான சக்தியை விட திக சக்தியை வெளியிட வேண்டும் இதனாலே தான் நம் சூரியன் பிரகாசமாக இருக்கிறது


நட்சத்திரங்கள் எவ்வாறு ஜொலிக்கின்றன ?



நட்சதிரங்கள் பிரகாசிக்க காரணம் அணுக்கரு பிணைவு நிகழ்வு(nuclear fusion) ஆகும்.
நிறை குறைந்த பொருட்கள், நிறை அதிகமுள்ள பொருட்களுடன் மோதி பிணைந்து சக்தி , ஒழி , வெப்பம் வருகின்றன . அந்த நட்சத்திரமும் பல மில்லியன் ஆண்டுகளுக்கு ஜொலிக்கின்றன

நட்சதிரங்கள் எவ்வாறு அழிகின்றன ?
எதுவும் நிரந்தரமல்ல என்பதற்கேற்ப நட்சத்திரங்களின் மையத்தில் இறுப்பு இருக்கும் ஹைட்ரோஜென் தீர்ந்து கொண்டிருக்கும் அது தீர்ந்து போனதும் நட்சத்திரம் சுருங்க ஆரம்பிக்கிறது வெளிப்புறம் உள்ள ஹைட்ரோஜென் அதிக வேகத்தில் எரிய ஆரம்பிக்கிறது இதனால் சக்தி மேலும் அதிகரிக்கிறது
இதனால் வெளிப்புறம் சிதற ஆரம்பிக்கிறது.
இறுதியில் எதிலிருந்து பிறந்ததோ அது போலவே மாறி விடுகிறது நட்சதிரங்கள்
நேபுலாவிளிருந்து தோன்றி இறுதியில் நேபுலாவகவே மாறிவிடுகிறது
இவை செம்பூதங்கள் என்றலைகப்படுகின்றன.

(நன்றி நண்பர்களே இந்த பதிவு பற்றிய உங்கள் கருத்துகளை comment ல சொல்லுங்க
அடுத்த பதிவு நட்சத்திரங்களின் தொகுப்பான அண்டங்கள் universe)

Sunday, July 31, 2011

பூமியின் கதை

புவி (Earth)








சூரியனிலிருந்து மூன்றாவதாக உள்ள கோள் ஆகும்,
பூமியின் நிறை ஏறக்குறைய 5.98×1024 கி.கி. ஆகும். பூமி, இரும்பு (32.1%), ஆக்சிஜன் (30.1%), சிலிக்கன் (15.1%), மெக்னீஷியம் (13.9%), சல்பர் (2.9%), நிக்கல் (1.8%), கால்சியம் (1.5%), மற்றும்அலுமினியம் (1.4%); மீதமுள்ள 1.2% மிகவும் குறைந்த அளவிலுள்ள தனிமங்களால் ஆனது.நிறை பிரிவினால் புவியின் உட்கரு பிரதானமாக இரும்பினாலும் (88.8%) சிறிதளவு நிக்கல் (5.8%) மற்றும் சல்பர் (4.5%) ஆகியவற்றாலும், மேலும் ஒரு விழுக்காடு அரிதான தனிமங்களாலும் ஆகியுள்ளது

பூமி தன்னைத்தானே விநாடிக்கு 30 கி.மீ. (மணிக்கு 108,000 கி.மீ.) வேகத்தில் சுழல்கிறது, இது பூமியின் விட்டத்தை (ஏறத்தாழ 12,600 கி.மீ.) ஏழு நிமிடங்களிலும், சந்திரனுக்கு செல்லும் தூரத்தை (384,000 கி.மீ.) நான்கு மணி நேரத்திலும் கடக்க ஏதுவான வேகமாகும்

மனிதர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் வாழும் இடமான இந்த புவி, அண்டத்தில் உயிர்கள் இருப்பதாக அறியப்படும் ஒரே இடமாக கருதப்படுகின்றது.
அறிவியல் அறிஞர்கள் புவியின் கடந்த கால வரலாற்றை பற்றி விரிவாக வரையறுத்துள்ளனர். சூரிய மண்டலத்தில் காணப்படும் மிகப் பழமையான பொருள் 4.5672 ± 0.0006 பில்லியன் வருடங்களுக்கு முந்தியது. இந்தக் கோள் சுமார் 4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவானது., ஒரு பில்லியன் ஆண்டுகளுக்குள் அதன் மேற்பரப்பில் உயிரினங்கள் தோன்றின. அது முதல் பூமி உயிர் கோளம் என அழைக்கபடுகிறது.



பின்பு ஒசான் மண்டலம் உருவாகி புவியின் காந்த மண்டல்தொடு அகிலத்திலிருந்து வரும் தீங்கு விளைவிக்கும் கதிர்களை தடுத்து உலகில் உயிர்கள் தழைப்பதர்க்கு வழி ஏற்பட்டது. இக்காலகட்டங்களில் புவியின் பௌதிக தன்மையினாலும் புவி சூரியனை சுற்றி வந்தமையினாலும் உலகில் உயிர்கள் நிலைபெற்றன. தற்போதுள்ள, உயிர்களுக்கு ஏதுவான சூழல் மேலும் 1.5 பில்லியன் ஆண்டுகளுக்கு நிலவும் எனவும், பிறகு வளரும் சூரியனின் வெப்ப ஒளிர்வு தன்மைகளால் புவியின் உயிர்க்கோளம் அழிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


புவியில் சுமார் 71% பரப்பு உப்பு நீருள்ள பெருங்கடல்களாலும் மற்ற பகுதிகள் கண்டங்கள், தீபகர்பங்கள் மற்றும் எல்லா உயிர்களுக்கும் அதிமுக்கியமான நீராலும் நிரப்பப்பட்டுள்ளது. சூரிய மண்டலத்தில் உள்ள மற்ற கிரகங்கள் அதிக வெப்பமாகவோ அல்லது குளிர்ந்தோ காணப்படுவதால் இந்த கிரகங்களில் திரவ நீர் காணப்படவில்லை.
எனினும் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் மட்டும் திரவ நீர் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது, அடர்ந்த திட பரப்பு , காந்த மண்டலத்தை உருவாக்கும் திரவ வெளிமையம் மற்றும் திட உள்மையம் ஆகியவற்றால் புவியின் உட்பகுதி மிகுந்த ஆற்றலுடன் இயங்குகிறது


புவியின் அச்சு சுழற்சி அதன் கோள பாதையிலிருந்து, 23.4° செங்குத்தாக விலகி சாய்ந்து இருப்பதால், கோளின் மேற்பரப்பில் கால ம்மருபாடுகள் ஏற்படுகின்றன.

புவியின் நாமறிந்த ஒரே இயற்கையான செயற்கைகோள் நிலா, 4.53 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து பூமியை சுற்ற ஆரம்பித்தது, இது கடலில் அலைகளை உருவாக்குவதோடு, புவியின் அச்சு சாய்வை நிலைப்படுத்தி, அதன் சுழற்ச்சியையும் சிறிது சிறிதாக குறைக்கிறது.



வளிமண்டலத்தில் நீர் சேர ஆரம்பித்தவுடன் முதலில் உருகிய நிலையில் இருந்த புவியின் மேற்பரப்பு குளிர்ந்து இறுகத் தொடங்கியது. இதற்குப்பின் புவியின் இயற்கை துணைக்கோள் நிலா உருவானது. நிலா, செவ்வாய் கிரகத்தின் பரப்பை ஒத்த ஒரு விண் வெளி பொருள் (தீயா என்று சில சமயம் அழைக்கப்படும்), புவியின் பத்தின் ஒரு பங்கு திண்மத்தை கொண்டதுமாகிய அப்பொருள் புவியின் மீது கொண்ட தாக்கத்தால் உருவாகியிருக்கலாம் என நம்பப்படுகிறது. இவ்வேற்றுலக பொருளின் ஒரு பகுதி புவியுடன் கலந்திருக்கலாம் எனவும் மற்ற பகுதிகள் விண் வெளியில் சிதறியும், புவியின் காந்த விசையால் புவியை சுற்றும் பாதையை அடைந்திருக்கலாம் எனவும் எண்ணப்படுகிறது.
எரிமலை சீற்றம் மற்றும் வாயுக்களின் வெளிக்கொணர்வு ஆகியன ஆதிகால புவியின் வளிமண்டலத்தை உருவாக்கின. விண் பெருகற்கள், வால் நட்சத்திரம், பெரிய முன்கிரகங்கள் மற்றும் நெப்ட்டியூனைத் தாண்டி உள்ள சூரிய மண்டலத்திலுள்ள விண் வெளிப் பொருட்களிலிருந்து பெறப்பட்ட பனிக்கட்டி, நீர் ஆகியனவும் வளிமண்டலத்திலிருந்து சுருங்கும் neeraviyinaalum , சமுத்திரங்கள் உருவாகின.

இன்றைய நிலையில், புவியில் மட்டுமே உயிர்களின் பரிணாம வளர்ச்சி ஏற்பட ஏதுவான சூழல் உள்ளது. நான்கு பில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஆற்றல் மிகு வேதியியல் வினைகளால் சுயமாக உருவாகும் மூலக்கூறுகள் ஏற்பட்டன, பிறகு அரை பில்லியன் வருடங்களுக்குள் எல்லா உயிரினங்களின் பொது மூதாதையரான உயிரினம் உருவாகியது. தாவர உயிரினங்களின் ஒளிச்சேர்க்கைத் தன்மையினால் சூரிய ஆற்றலை உபயோகப்படுத்தின;


இந்த வேதி வினையினால் ஏற்பட்ட பிராணவாயு (ஆக்சிஜன்) வளிமண்டலத்தை நிரப்பியது. மேலும் ஓசோன் (ஆக்சிஜன் மூலக்கூறின் ஒருவடிவம் [O3]) படலம் மேல் வளி மண்டலத்தில் உருவாக உதவியது. பல சிறு செல்கள் பெரிய செல்களுடன் சேர்ந்ததினால் நுணுக்கமான செல்கள் யூகேர்யோட்டுகள் (eukaryotes) உருவாகின. இப்படிப்பட்ட காலனிகளில் அடங்கிய செல்கள் தனித்தன்மையுடன் செயல்படத் தொடங்கியபோது உண்மையான பல செல் படைத்த உயிரினங்கள் உருவாகின. மேலும் வளி மண்டலத்தின் மேற்பரப்பில் அமைந்த ஓசோன் மண்டலம் வெளியிலிருந்து புவிக்கு வரும், கேடு விளைவிக்கும்புற ஊதாக் கதிர்களை உறிஞ்சியதால் பூவுலகில் உயிர்கள் தழைத்தன.

535 மில்லியன் வருடங்களில் புவியில் ஐந்து பேரழிவுகள் ஏற்பட்டுள்ளன. கடைசியாக ஏற்பட்ட பேரழிவு 65 மில்லியன் வருடங்களுக்கு முன் ஒரு பெரிய விண்கல் புவியில் வந்து விழுந்ததால் ஏற்பட்டிருக்கக் கூடும் என நம்பப்படுகிறது. இந்த தாக்கத்தினால் டைனோசர் உட்பட பல ராட்சத பல்லிகள் மற்றும் பறவையினங்க எல்லாமுமே கூண்டோடு அழிந்து போனது. இதில் தப்பியது எலியைப் போன்ற ஷ்ரூ என்றழைக்கப்படும் பாலுண்ணிகளே. கடந்த 65 மில்லியன் வருடங்களில் பாலுண்ணிகள் பல்வேறு பரிணாமங்களை அடைந்துள்ளன,

சில மில்லியன் வருடங்களுக்கு முன், ஆப்பிரிக்கா கண்டத்தில் மனிதக்குரங்கைப் போன்ற ஓர் மிருகம் நிமிர்ந்து நிற்க ஆரம்பித்தது. அவ்வாறு நின்றதால் கருவிகளை உபயோகிக்கவும் தகவல் பரிமாறவும் முடிந்தது, இதுவே மூளையின் வளர்ச்சிக்கு வித்திட்டது. இவ்வாறு அதிவிரைவாக வளர்ந்த மனிதனே முதலில் புவியில் விவசாயம் மற்றும் நாகரீகத்தையும் அறிமுகப்படுத்தினான். இதனால் ஏற்பட்ட தாக்கம் மற்ற புவி வாழ் உயிரினங்களின் வாழ்க்கை மற்றும் போக்கு இவற்றை மாற்றியமைத்தது
.


சூரியனின் உட்கருவில் சேர்ந்து வரும் ஹீலியம் வாயுவினால், அதன் மொத்த ஒளிர்வுத்தன்மை மெல்ல வளரும். சூரியனின் இந்த ஒளிர்திறன் அடுத்த 1.1கிகா ஆண்டுகளில் (1.1 நூறு கோடி வருடங்கள்) 10 சதவிகிதமும் அடுத்த 3.5 கிகா [43] ஆண்டுகளில் 40 சதவிகிதமும் அதிகரிக்கும். காலநிலை கணிப்பின்படி புவியை வந்தடையும் அதிக கதிர்வீச்சு, கடல் இழப்பு போன்ற மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

அடுத்த 900 மில்லியன் வருடங்களில் தாவரங்களுக்கு அத்தியாவசியமான கரியமலவாயு (C4 ஒளிச்சேர்க்கைக்குத் 10 பிபிஎம்) வளிமண்டலத்தில் குறையும். தாவரங்கள் அழிவதால் அது வெளியிடும் ஆக்சிஜன் தடைப்படும், அதனால் மற்ற உயிரினங்கள் சில மில்லியன் ஆண்டுகளிலேயே முழுவதுமாக அழிந்து விடும்.

புவியின் உட்புற குளிர்ச்சி பெரும்பான்மையான வளி மண்டலத்தையும் கடற் பரப்பையும் குறைத்திடும் அடுத்த நூறு கோடி வருடங்களில் புவியின் மேற்பரப்பில் உள்ள தண்ணீர் அனைத்தும் மறைந்திருக்கும்.

பூமியின் அச்சு சாய்ந்திருப்பதால், பூமியின் மேற்பரப்பில் விழும் சூரிய ஒளியின் அளவு வெவ்வேறு இடங்களில் பெரிதும் வேறுபடுகின்றது. இது பல காலம் சார்ந்த தட்பவெப்பநிலை மாற்றங்களை, ஏற்படுத்துகின்றது, வடதுருவம் சூரியனை நோக்கி உள்ள போது வட கோளார்தத்தின் கோடை காலமும், அதுவே சூரியனை விட்டு விலகி உள்ள போது குளிர்காலமாகவும் ஏற்படுகின்றது.

ஆர்ட்டிக் வளையத்திற்கு மேல் ஓர் அதீதமான செயல் காணப்படுகின்றது, அங்கே வருடத்தின் ஒரு பகுதி காலத்தில் வெளிச்சமே இருப்பதில்லை - இது துருவ இரவு என்றழைக்கப்படுகின்றது. தென் துருவம் வடதுருவத்திற்கு எதிர்புறம் அமைந்திருப்பதால், தென் கோளார்த்த காலங்கள் வட கோளார்த்த காலங்களுக்கு எதிர்மறையாக அமைந்திருக்கிறது.




புவிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள புவிஈர்ப்பு சக்திதான் புவியில் பேரலைகள் உண்டாகக் காரணமாக இருக்கிறது. இதுவே சந்திரனில் பேரலை நிறுத்தத்திற்கும் காரணமாகிறது: இதன் சுழற்சிக் காலமானது அது பூமியைச் சுற்றி வரும் காலத்திற்குச் சமமாகும். இதன் காரணமாகவே, இது பூமிக்கு எப்பொழுதும் ஒரே பகுதியைக் காட்டுகிறது. சந்திரன் பூமியைச் சுற்றி வருவதால், அதன் வெவ்வேறு பகுதிகள் சூரியனால் ஒளிரச் செய்யப் படுகின்றன.

!!நன்றி நண்பர்களே மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் அடுத்த பதிவு நட்சத்திரங்கள் மற்றும் நட்சத்திர தொக்குப்பு (பால் வழி அண்டம்)!!



Friday, July 22, 2011

நம் சூரிய குடும்பத்தின் கதை

சூரியன் (sun)

நம் தலைவர் ஒரு சூப்பர் ஸ்டார்.

வயது 500 கோடி ஆண்டுகள் இன்னும் 700 கோடி ஆண்டுகள் உயிருடன் இருக்கலாம்.

நம் பூமியை விட 13 லட்சம் மடங்கு பெரியவர். 9.8 கோடி மைல் தூரத்தில் இருக்கிறார் .

நம் தலைவரின் மேற் புற வெப்பம் 6000 டிகிரி கெல்வின். தினமும் நம் சூரியன் சாப்பிடும் உணவு 39,744 தன் ஹைட்ரோஜென் அணுக்கள். அவை இணைந்து ஹீலேயும் ஆகிறது.



வியாழன்:(jupiter)

நம் சூரிய குடும்பத்திலேயே பெரியவர் ஒரு தராசில் ஒரு பக்கம் வியாழனையும் மறு பக்கம் மற்ற 8 கோள்களையும் வைத்தல் கூட அவை வியாழனின் எடைக்கு நிகர் ஆக முடியாது.
நம் பூமியை விட 318 மடங்கு பெரியவர்.


ஆனாலும் தன்னை தானே சுற்றி கொள்ள 9.9 மணி நேரமும் , சூரியனை சுற்றி வர 11.86 வருடமும் எடுத்து கொள்கிறார்

வியாழனுக்கு 16 துணை கோள்கள் உள்ளன . அவற்றில் 4 மிக பெரியது

jupiter compared to earth:




புதன்:(mercury)
சூரியனுக்கு மிக அருகில் உள்ளவர் சூரியனை 87 .97 நாட்களில் சுற்றி வந்து விடுகிறார்

ஆனால் தன்னை தானே சுற்றி கொள்ள 5 நாட்கள் எடுத்துகொள்கிறார் பூமியை ய விட 3 மடங்கு சிறியவர்.





வெள்ளி:(venus)


அடுத்து நாம் பார்க்க இருப்பது நம் அண்டை வீட்டார் வெள்ளி அவர்கள்.

இவர் தன்னை தானே 243 நாட்களில் சுற்றி கொள்கிறார் அனால் சூரியனை 227 .4 நாட்களில் சுற்றி விடுகிறார்.

அதாவது அவருக்கு ஒரு நாள் என்பது ஒரு வருடத்தை விட அதிகம்






செவ்வாய்(mars)
அடுத்து நாம் காண இருப்பவர் செவ்வாய் அவர்கள்
இவர் மிகவும் அழகானவர்,


சிவப்பாக தோன்றுகிறார் இதர கிரகங்களுடன் ஒப்பிடும் போது மனிதன் போய் குடியேற வாய்ப்புகள் அதிகம்
இவர் தன்னை தானே சுற்றி கொள்ள 10 மணி நேரமும் சூரியனை சுற்றி வர 29 .5 ஆண்டுகளும் ஆகின்றன

earth, mars and moon:




சனி(saturn):
வியாழனுக்கு அடுத்து நம் குடும்பத்தில் பெரியவர் இவர் .

வெப்ப நிலை -285 டிகிரி சனி கிரகத்தில் பருவ நிலை 7 .5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறுகிறது .

தற்போது அறிந்த வரை இவருக்கு 23 துணை கோள்கள் உள்ளன

இவருடைய ஒரு துணை கோளான தைடனில் (titan) சில நுண் உயிரிகள் வாழ கூடும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்







uranus:
அடுத்த நம் சூரிய குடும்ப உறுப்பினர் நம் uranus அவர்கள்

� பூமியை விட 15 மடங்கு பெரியவர்.

இவர் சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுத்து கொள்ளும் காலம் 84 ஆண்டுகள். 6.81
கி.மீ./விநாடி வேகம்

இவருக்கு 20 துணை கோள்கள் உள்ளன

இவருக்கு எடை இல்லை




நெப்டியூன்

இவர் சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுத்து கொள்ளும் காலம் 160 ஆண்டுகள் 5 .43 கி.மீ./விநாடி வேகம்

இவருக்கு 13 துணை கோள்கள் உள்ளன

நேப்டியுனை உங்களிடம் தரமான பயினகுளர் இருந்து மெகா மூடம் இல்லாதிருந்து
உங்களுக்கு பொறுமையும் இருந்தால் உங்கள் வீடு மாடியில் இருந்தே பார்க்கலாம்





ப்ளுட்டோ
இவர் தன நம் சூரிய குடும்பத்திலேயே மிகவும் தூரத்தில் உள்ளவர் மற்றும் மிகவும் சிறியவர்
இவர் சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுத்து கொள்ளும் காலம் 250 ஆண்டுகள் 4 .7கி.மீ./விநாடி வேகம்

1930 இல் கண்டறிய பட்டது

நேப்டியுனும், யுரனுசும் ஒழுங்கான நீள் வட்ட பாதையில் சுற்றுகின்றன என்பதே அடுத்து ஒரு கிரகமும் அதற்கு ஈர்ப்பு விசையும் உள்ளது என்பதற்கு சாட்சி.

அதே போல் இதுவும் நீள் வட்ட பாதையில் சுற்றி வருவதால்
அடுத்தும் ஒரு x கிரகம் இருக்கலாம் அனால் இன்னும் கண்டறிய படவில்லை

இருபினும் நிறைய பெரியதும் சிறியதுமான பொருட்கள் சுற்றி வந்து கொண்டு தான் இருக்கின்றன புளுடோ வுக்கு அப்பால்







பூமி மற்றும் நிலா :
பூமி மற்றும் நிலா வை பற்றி அடுத்த பதிவில் விரிவாக பார்க்கலாம்

சூரிய குடும்பம்:







( இது என்னுடைய முதல் பதிவு திருத்தங்கள் இருந்தால் கமெண்ட் இல் சொல்லவும்
தங்கள் வருகைக்கு நன்றி )